Wednesday, November 23, 2016

நாட்டு மருத்துவம்

தங்களுக்கு தெரிந்த நாட்டு மருத்துவம் மருந்தகங்கள் பற்றி இந்த வெபிசிடில் பகிரவும்.... அனைவரும் பயன் பெறுவர்
www.gutsyreview.com

கருப்பு ஆடுகள்

திடுமென்று பல கட்சிகள் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று போராடுவதின் உல் நோக்கம் மக்களுக்கு புரியாமல் இல்லை.


இவர்கள் மக்களிடம் என் தகப்பன் குதிக்குளில்லை  என்று மாட்டிக்கொண்டதை போலவே தோன்றுகிறது.இவர்கள் மாட்டும் இல்லையென்றால்  இந்திய நாடு  எப்போழுதோ முன்னேறி இருக்கவேண்டும்... என்ன செய்வது நம் நாட்டு  மக்களின் தேசப்பற்றின் முன் உள்ள திருஷ்டி இவர்கள்.

ஒரு  கணக்கெடுப்பு சொல்கிறது 88% விழுக்காடு மக்கள் இந்த நடவடிக்கையை ஏற்கின்றனர் என்று.... அவதியிலும் மக்கள் ஆதரிகின்றனர்  என்றால் அது மக்களின் நாட்டுப்பற்றையே காட்டுகின்றது 

இது உண்மையில் நாம் நம்மை பெருமை படுத்திக்கொண்டிருக்கும் ஒரு செயல் தருணம் ஆகும்  வாழ்க இந்திய நாடும் மக்களும் 








Sunday, May 15, 2011

அமைதி புரட்சி

எனது பதிவெட்டில் 9 மார்ச் அன்றே எழுதி இருந்தேன் அமைதி புரட்சியை பற்றி அது தமிழ் நாட்டில் நடந்தே விட்டது
நம் மொழி மொழி என்று கூறி நம் இனத்தவர்கள் மலை மலையக மடிந்தபோது தன 10 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தவர்களுக்கு?..............


ஆத்திகவாதியின் பார்வையில்- தெய்வம் நின்று கொன்றுவிட்டது

நாத்திகவாதியின் பார்வையில்- அநீதிக்கு தண்டனை
கிடைத்துவிட்டது


தண்டனை என்ற வார்த்தை ஏன் ஏன்?
ஒரு கட்சி தேர்தலில் தோற்பது சாதாரணம் தான் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை அனால் இந்த முறை தோல்வி? இது கலைஞரின் கடைசி தேர்தலாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது? அந்த தருணத்தில் தான் மிகவும் விரும்பி எங்கும் பதவி தான் கையில் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக தண்டனையே வேதனையின் உச்சமே
இனி தன்னை ராஜா போல நினைத்துகொண்டு வாரம் ஒரு பிரிவினரை முக்கியமாக சினிமா துறையினரை அழைத்து  இவர் புகழ்  பாட வைத்து இன்புரமுடியாது இதுவே பெரும் சோதனை தான் அவருக்கு :-D


ஒரு செம்மொழி மாநாடு என்று தமிழை வளர்க்க முற்பட்டதன் பதில் ஓராயிரம் தமிழ் மைந்தர்களை காப்பற்றி தமிழை வளர்த்திஇருக்கலாம் ?
நான் கூறுவதில் என்ன தவறு?
அரசியல் சாணக்கியர் என்று வருநிக்கபடவர் கடைசியில் நம்பியது வடிவேலுவை? இதுதான் காமெடியின் உச்சமே
இதற்க்கு மேல் பெரிய தந்திரம் எதுவாக இருக்கமுடியும்


இந்த முறை திமுக வேல்வதிர்கான காரணத்தை கூறுவதை விட தொற்பதிர்கான காரணம் அதிகம்
1 . நகரங்களில் 2 g
2 . கிராமபுரங்களில் மின் தடை
3 . தொழில் செய்பவர்கள்- சினிமா துறை, நில ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை,
இவை
எல்லாவற்றிலும்   ஒன்று விடாமல் இருக்கும் இவர்கள் குடும்ப ஆதிக்கம்


இவை எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வோட்டளித்து அவர்கள் வரும்பொழுது எல்லாம் கூட்டம்  கூடி உங்களுக்கு தான் வோட்டை போட்டோம் என்று கூறி  எப்படி எல்லாம் நேக்காக காயை  நகர்தியிருகிரார்கள் தமிழக மக்கள்  இது வல்லவோ ஜனநாயக புரட்சி..... இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை இனி வருபவர் எவராக இருந்தாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது..... பெரிய எச்சரிக்கை
அழகாக

Saturday, March 12, 2011

கேள்வி- II



பால் அபிஷேகம் புண்ணியம் என்றால்?
அது தன ரத்தத்தை  பாலாக கொடுத்த  பசுவிற்கா ? அல்லது 
பணம்  கொடுத்து அவற்றை வீணாக்கும்  இந்த மனிதர்களுக்கா?






இந்தியாவின் உணவு பற்றாக்குறை 10 .33% ஆக  உயர்வு?
இந்தியாவின் ரூபாய் நோட்டை கிழித்து வீணாக்குவது  குற்றம்  என்றால்?
பசியால் வாடுவோர் கோடி இருக்க  இப்படி உணவு  பண்டங்களை
வீனாக்குவோரும்  குற்றவாளிகள் தானே? 

Thursday, March 10, 2011

நல்ல கேள்வி?

Wednesday, March 9, 2011

மர்மம் என்ன? கூட்டணி நாடகங்கள்


இந்த முறை காங்கிரஸ் திமுகவுடனுடைய மர்ம பேரங்கள் கூட்டணி பணியல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது


1 . இவர் 60 ௦ சீட்டுகள் மட்டுமே தருவன் என்பதும் இல்லை 63 சீட்டுகள் வேண்டும் என்று அவர்கள் கேட்பதும் ....வெறும் 3 சீட்டுகளுக்க இவர்கள் அடித்துகொள்கிறார்கள்?


2 . திடுமென்று சோனியா காங்கிரசின் தன்மானத்தை பற்றி பேசுகிறார்.... நல்ல நகைச்சுவை இதே கலைஞர் தான் அன்று இந்திரா காந்தியை ரத்த காட்டேரி என்றும் , ....இன்னும் எத்தனை எத்தனையோ கூறி இருக்கிறார்.... இதை எல்லாம் மீறி அமைந்த கூட்டணிக்கு திடுமென்று எங்கே இருந்து தன்மானம் வந்தது ?


3 . 2g ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில முக்கிய புள்ளிகள் விசாரிக்கபடலாம் என்று அஞ்சப்படும்போது திடுமென்று பேசப்படும் பேரங்கள் , அடங்காதவர்கள் அடங்கி பொய் பணிவது இவை எல்லாம் அந்த விவகாரத்தில் வரும் உண்மையை எவ்வளவு தூரம் தடுக்கும் என்பது கவலை மிகுந்த விஷயம்?


4 .நம் தமிழ் சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தபோது எதனை முறை டெல்லி விரைந்தார்கள் இல்லை தலைவர்களை சந்தித்தார்கள் என்பது மனதை உருக்கும் கேள்வி? இபோழுது இத்தனை முறை அதுவும் தல்லாமல் இருந்தாலும் விடாமல் செல்கிறார்கள்! கண்கூடாக நடக்கும் வேதனை .......நம் மக்களை அழிக்க உதவியர்களின் ஆதரவை பெற இத்தனை பணிவு இத்தனை கெஞ்சல்கள்.... இதெல்லாம் மீறி ...... தங்களை பறை சாற்றி கொள்வது என்னவென்றால்?


தமிழ் மக்கள் நலனுக்காக தமிழ் மண்ணுக்காக உயிர் என்று ............... வடிவேலுவின் டோனில் சொலவேண்டுமேன்றால் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது? என்று கேட்பது போல் இருக்கிறது

5 . இதெல்லாம் விடுங்க தேர்தல் ஏப்ரல் 13 இருக்க வோட்டு எண்ணிக்கை ஏன் ஒரு மாதம் கழித்து நடத்தப்படவேண்டும்?


இதன் முடிவு:
சரி ஒவ்வொரு  முறையும் யார் வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் சிய போவதில்லை ஒன்று அவர்கள் குடும்பத்திற்கு அல்லது சினிமா துறை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே உபயோகம் என்று ஓரிரூ முறை ஓட்டை செலுத்தாமளிருந்ததுண்டு
ஆனால் இம்முறை நம் இனத்தவர்கள் மடிந்ததற்கு அஞ்சலி செய்ய வேண்டும்
அவர்களுக்கு உதவ வழி இருந்தும் அவர்கள் அழிவதற்கு உதவியர்களுக்கு
எனது வோட்டு கள்ள வோட்டின் மூலம் போய்விடக்கூடாது என்பதற்காகவே
இம்முறை கண்டிப்பாக வோட்டை போடவேண்டும் என்று முடிவேடுத்திருகிரேன்







Thursday, October 7, 2010

எந்திரன் - தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்

சரி படம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது பார்க்கலாம் கூட்டம் கம்மி ஆகி இருக்ககூடும் என்று பெங்களூரில் தியேட்டருக்கு சென்றேன்..... ஏமாற்றம் ....கூட்டம் அலைமோதியது....சரி ஹிந்தியிலாவது பார்க்கலாம் என்றால் அங்கும் கூட்டம் ..... எனக்கு மனதில் தோன்றிய ஒன்று




ரஜினியின் " இது நானா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த கூட்டம் " என்ற வசனம்  தான்  கண்டிப்பாக இன்னும் ரஜினி நூறு படங்கள் நடித்தாலும் இந்த கூட்டம் இருக்கும் ..... ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்- சிரஞ்சீவியை போல் அரசியலில் குதித்து பாழாகாமல் சினிமாவில் இந்த சிம்மாசனத்திளியே இருங்கள்.... இந்த இடம் யாருக்கு கிடைகாத ஒரு தனி இடம்......இனி யாரும் அடைவது மிக மிக கடினம் ...


சரி ஒருவழியாக 200 டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன் முதலில் கொஞ்சம் நெருடல் இருந்தது இருநூறு ருபாய் என்று


படம் பார்த்த பிறகு மனதில் -: அந்த இருநூறு ருபாய் மறந்தே போனது " movie is worth "


விமர்சனம்:


இரு விமர்சனம் ரஜினி ரசிகராக, நல்ல படங்களை விரும்பும் ரசிகனாக


1 . நல்ல படங்களை விரும்பும் ரசிகராக--
அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எறியும் என்பார்கள் அவ்வகையில் இப்படம் கதை எழுதிய சுஜாதாவிருக்கு சமர்ப்பணம் அருமையான கற்பனை......


கதை-
வசீகரன்   தனது 10 வருட உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறான்.... அதை இந்திய ராணுவத்தில் சேர்த்து பயன் கொள்ள செய்வதே லட்சியமாக...... அதை உணர்ச்சி இல்லாத இயந்திரம் என்று அவரது மூத்த அதிகாரிகள் தள்ளுபடி செய்கின்றனர்.... அதற்காக உணர்சிகளை தரும் செயற்கை புத்தியை(Artifical intelligence ) செலுத்துகிறார். ரோபோ உணர்வை பெற்று வசீகரனின் காதலியை விரும்புகிறது ராணுவ டெஸ்டில் கோட்டை விடுகிறது ....


அட நாம காலேஜ் பசங்க மார்க்கில் கொட்டோ விடுகிறது போல .....

 
சரி கதைக்கு வருவோம் இலட்சியத்தை பாழடித்ததற்காக வசீகரன்  ரோபோவை வெட்டி குப்பையில் போடுகிறான்..... அந்த ரோபோவை , வில்லன் சரி செய்து அழிவை ஏற்படுத்தும் சிப் பை அதனுள் செலுத்துகிறான்....அது வில்லனை கொன்று விஸ்வருபம் எடுக்கிறது


வில்லன் ரோபோ வசீகரனின் காதலியை கடத்தி வசீகரனிர்க்கு  எதிராக போர் தொடுக்கிறது பல ரோபோக்களை உருவாக்குகிறது ........கடைசியில் வரும் கிராபிக்ஸ் பைட் தமிழ் சினிமாவை தலைதூக்கும் ஒரு புதுமை ஆகும் ....சபாஷ் சங்கர் அண்ட் குரூப்


கடைசியில் ரோபோவின் ராஜ்யத்தை அழித்து அதன் அழிக்கும் கமான்ட்களை சரி செய்கிறான் வசீகரன்..... பல சேதங்களை ஏற்படுத்திய இந்த ரோபோவை நீக்க சொல்கிறது கோர்ட் .... தனது பார்ட் ஒவ்வோன்றையும்  தானாகவே கழட்டி வைகிறது ரோபோ ....இப்படி முடிகிறது படம்




படத்தில் பிடித்தது----
1 . பாதிவரை வரும் சுஜாதாவின் வசனங்கள் ...முக்கியமாக அந்த .ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் உரையாடும் வாசனைகள், காலேஜில் பிட் அடிக்கும்பொழுது பேசும் வசனங்கள்,
2 கிராபிக்ஸ்- தலையை திருப்புவது, காரிலிருந்து முன்னிற்கு இழுத்து சண்டை போடுவது...... கடைசி கிளைமாக்ஸ்
3 கிளைமாக்ஸ் வசனம்- உண்மையில் ரோபோ ரஜினி தனது பாகத்தை கழட்டி வைக்கும்பொழுது நெருடத்தான் செய்கிறது அதுவும் அவர் பேசும் வசனங்கள் மிக உண்மை
" டேய் நீங்க ரெண்டு பெரும் உங்ககிட்ட இருக்கற ஒன்னு என்கிட்ட இல்லன்னு சொன்னீங்களே   அதனால எத்தன சிக்கல் பார்த்தீங்களா  ,,, நான் FEELINGSA  சொன்னேன் " என்று பேசும் வசங்கள் பலவற்றை குறிக்கும் நிதர்சன உண்மை
4 . பாடல்கள்-, எ.ர ரஹ்மான் இசை, ரீ ரெகார்டிங்
5 . குழந்தைகளை கவரும் கொசுவுடன் பேசும் வசனங்கள்


படத்தில் தோய்வு
1 ரோபோ பீலிங்க்ஸ் இல்லாதது என்று நிருபிக்க ஒரு தீவிபத்திலிருந்து ஒரு பெண்ணை உடை இல்லாமல் காப்பாற்றும் சீன்.... அதை பத்திரிகை காரர்கள் போடோ பிடிக்க அப்பெண் தற்கொலை செய்து கொள்வது
மொக்கை ஐடியா.... இது..... மொக்கை காரணம் வேறு ....
.விஞ்ஞான கூடத்தில் வசீகரனை கத்தியால் குத்த வரும் அந்த சீனுடன் விட்டிருக்கலாம் .....
2  கிராபிக்ஸ் அப்பட்டம தெரிகிறது பல இடங்களில் உதாரணம் அந்த தீ விபத்திலிருந்து காப்பாற்றும் சீன்.
ஆஸ்கார் பூக்குட்டி ஸ்பெஷல் எபக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் மேனகெட்டிருக்கலாம்
3 . வில்லன் ரஜினி என்பது பெரிய ஹைலைட்அதற்கு இன்னும் சிறப்பான வசனங்களை கொடுத்திருக்கலாம்.....நாம் எதிர்பார்த்தது "இது எப்படி இருக்கு" பரட்டை ரஜினி போன்ற ஒன்றை ................ சான்ஸ் மிஸ்


ரஜினி ரசிகனின் பார்வையில்:-
படம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா
எப்பொழுதும் ரஜினி படத்த பார்த்துட்டு ஏதாவது ஒரு பஞ்ச் வசனம் மனசுல நிக்கும்
அதிருது இல்ல, லக லக லக போன்ற வசனங்கள்.... அப்படி எல்லாம் இதுல எதுவும் இல்ல


தலைவர் நடக்குறத தவிர வேற எந்த ஸ்டைலும் பெரிசா காமிக்கல


பிடித்தது:-


1 அட இந்த காரெக்டருக்கு குறிப்பா வில்லன் கரெக்க்டருக்கு வேறு யாரும் பொருந்தி இருக்க முடியாது .........
2 எப்ப பாரு தலைவர் பட கதை ஒரு பணக்காரநிலிருந்து ஏழை ஏழையிளிருந்து பணக்காரன் இந்த ட்ரெண்டை உடைத்த விதம்
மூன்று  பரிமாணங்களிலும்  விளாசும் விதம் .. ..... அட எத்தன வயசானாலும் நீங்க சூப்பர் ஹீரோ தானுங்க....
4 கடைசியில் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் ரஜினி தவிர வேற யார் பேசி இருந்தாலும் உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை......
5 . அட தலைவரோட பழைய சிரிப்பு


சூப்பர் ஸ்டாரின் மைல் ஸ்டோன் படங்களில் இதுவும் ஒன்று கண்டிப்பாக

பைனல் கமெண்ட்-

1. தமிழ் சினிமாவின் புதிய பரிமாற்றம் .
கண்டிப்பாக குடுமபத்துடன் கண்டு ரசிக்கலாம்...

.
எந்திரன்  கூறும் உண்மை - லவ்வுன்னு வந்துட்டா  மனுஷன் என்ன ரோபோ என்ன எல்லாம் பாழாக  வேண்டியது தான் :-D.