Saturday, March 12, 2011
Thursday, March 10, 2011
Wednesday, March 9, 2011
மர்மம் என்ன? கூட்டணி நாடகங்கள்
1 . இவர் 60 ௦ சீட்டுகள் மட்டுமே தருவன் என்பதும் இல்லை 63 சீட்டுகள் வேண்டும் என்று அவர்கள் கேட்பதும் ....வெறும் 3 சீட்டுகளுக்க இவர்கள் அடித்துகொள்கிறார்கள்?
2 . திடுமென்று சோனியா காங்கிரசின் தன்மானத்தை பற்றி பேசுகிறார்.... நல்ல நகைச்சுவை இதே கலைஞர் தான் அன்று இந்திரா காந்தியை ரத்த காட்டேரி என்றும் , ....இன்னும் எத்தனை எத்தனையோ கூறி இருக்கிறார்.... இதை எல்லாம் மீறி அமைந்த கூட்டணிக்கு திடுமென்று எங்கே இருந்து தன்மானம் வந்தது ?
3 . 2g ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில முக்கிய புள்ளிகள் விசாரிக்கபடலாம் என்று அஞ்சப்படும்போது திடுமென்று பேசப்படும் பேரங்கள் , அடங்காதவர்கள் அடங்கி பொய் பணிவது இவை எல்லாம் அந்த விவகாரத்தில் வரும் உண்மையை எவ்வளவு தூரம் தடுக்கும் என்பது கவலை மிகுந்த விஷயம்?
4 .நம் தமிழ் சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தபோது எதனை முறை டெல்லி விரைந்தார்கள் இல்லை தலைவர்களை சந்தித்தார்கள் என்பது மனதை உருக்கும் கேள்வி? இபோழுது இத்தனை முறை அதுவும் தல்லாமல் இருந்தாலும் விடாமல் செல்கிறார்கள்! கண்கூடாக நடக்கும் வேதனை .......நம் மக்களை அழிக்க உதவியர்களின் ஆதரவை பெற இத்தனை பணிவு இத்தனை கெஞ்சல்கள்.... இதெல்லாம் மீறி ...... தங்களை பறை சாற்றி கொள்வது என்னவென்றால்?
தமிழ் மக்கள் நலனுக்காக தமிழ் மண்ணுக்காக உயிர் என்று ............... வடிவேலுவின் டோனில் சொலவேண்டுமேன்றால் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது? என்று கேட்பது போல் இருக்கிறது
5 . இதெல்லாம் விடுங்க தேர்தல் ஏப்ரல் 13 இருக்க வோட்டு எண்ணிக்கை ஏன் ஒரு மாதம் கழித்து நடத்தப்படவேண்டும்?
இதன் முடிவு:
சரி ஒவ்வொரு முறையும் யார் வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் சிய போவதில்லை ஒன்று அவர்கள் குடும்பத்திற்கு அல்லது சினிமா துறை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே உபயோகம் என்று ஓரிரூ முறை ஓட்டை செலுத்தாமளிருந்ததுண்டு
ஆனால் இம்முறை நம் இனத்தவர்கள் மடிந்ததற்கு அஞ்சலி செய்ய வேண்டும்
அவர்களுக்கு உதவ வழி இருந்தும் அவர்கள் அழிவதற்கு உதவியர்களுக்கு
எனது வோட்டு கள்ள வோட்டின் மூலம் போய்விடக்கூடாது என்பதற்காகவே
இம்முறை கண்டிப்பாக வோட்டை போடவேண்டும் என்று முடிவேடுத்திருகிரேன்
Subscribe to:
Posts (Atom)