
சென்ற வாரம் மருந்து மருத்துவ வியாபாரம பற்றி எழுதி இருந்தேன்... இந்த வாரம் நான் படித்த பார்த்த செய்திகள் என்னை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இந்த போலி மருந்துகள் விற்பவர்கள் மட்டுமின்றி இப்பொழுது காலாவதியான மருந்துக்களை அதிலுள்ள தேதி போன்ற விவரங்களை ஒரு வித அமிலத்தின் மூலம் அழித்து புதிய அச்சினை இட்டு புதிய மருந்தை போல் விற்றிருக்கின்றனர் மருந்து கடைகளும் இதை தெரியாமல் வாங்கவில்லை அதற்க்கு பெரிய சான்று எல்லா கடைகளிலும் சோதனை நடத்த ஆரம்பித்தவுடன் பல மருந்துகள் தொட்டிகளில் கொட்டபடிருக்கிறது அதுபோக பெட்டி பெட்டியாக மருந்துகள் எரிக்கபடிருக்கின்றது..... ..... இது பல காலமாக நடந்திருக்கிறது பெருவாரியாக சென்னையில்..... இதை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை என்னவென்று சொல்வது.... கொடும்பாவிகள்.... அடுத்தவர் உயிரில் தான் தமது குடும்பத்தின் உல்லாசம் என்று வாழ்பவர்கள் இவர்களை அந்நியன் வழியில் பூச்சிகளை விட்டு அழிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.,.... இந்த தவறை மறைத்து மேல்கூறிய வழிகளில் தங்களை பத்திரபடுத்திகொண்டுவிட்டது பல மருந்து கடைகள் நாம் செய்யவேண்டிய அடிப்படை ஒன்றே ஒன்று தான் இதற்க்கு நாம் தான் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ... கண்டிப்பாக மருந்து கடைகளில் பில்களை வாங்கவேண்டும் அது இது போன்ற மோசடி நேரங்களில் மருந்து கட்டுப்பாடு வரியங்களுக்கோ அல்லது கன்சூமர் கோர்ட் களுக்கோ கொண்டு செல்ல வசதியை இருக்கும்,......
0 comments:
Post a Comment