Thursday, March 11, 2010

குற்றம்.....கடமை தவறியவர்கள்

ஒரு அலசல்

ஒரு சமுதாயத்தில் ஒரு குற்றம் ஒருமுறை இருமுறை நடக்குமாயின் குற்றவாளிகளை வசை பாடலாம்
ஆனால் தொடர்ந்து நடக்கும் பட்ச்சத்தில் ......?
போலி சாமியார் குற்றத்தில் நித்தியானந்தா எத்தனையாவது மனிதர்?
சற்று சிந்தித்து பார்க்கும் பொழுது மூன்று கடமை தவறிய பொருப்பாளிகளைப் பற்றி அலச தோன்றியது ...

1 . செய்தி தொடர்பாளர்கள்- நாளிதழ்,தொலைகாட்சி அனைத்தும் இதில் அடக்கம்
2. காவல்துறை
3 காலம் தாழ்த்தி போரட்டங்களை நடத்தும் இயக்கங்கள்....

இவர்கள் கடமை தவறியவர்களே ஏன்?.... அலசுவோமா.....

1 . செய்தி தொடர்பாளர்கள்:-

இதை ஒளிபரப்பிய டிவி இந்த செய்தி கிடைத்தவுடன் என்ன செய்திருக்கவேண்டும்.... வியாபார நோக்கமில்லாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கவேண்டும்.... அப்படி செய்திருந்தால்... ஓடி ஒளிந்திருக்கும் குற்றவாளியை பிடிக்க தனி படை என்ற செலவை குறைத்திருக்கலாம், குற்றவாளி மற்ற சாட்சியங்களை முடக்குவதற்கு முன் கைதும் செய்திருக்கலாம் .....
ஒரு நாளிதழ்! இந்த சாமியாரை பிரபல பிரபலபடுத்தியாவர்களே இவர்கள்தான்... இப்பொழுது அந்த குற்றவாளி சம்பந்தபட்ட தொடரை நிருத்தபோவதாக கூறுகிறது .... வேடிக்கை!... ஐயா நீங்கள் தொடர்ந்தாலும் யாரும் அதை வாசிக்கபோவது இல்லை... எனவே வியாபார நஷ்டம் உங்களுக்குதான்.....

இதை போன்று பல போலிகளை பிரபலமாக்குவது மேல் கூறிய தொடர்பினங்கள்தான்.

சரி .... இந்த சம்பவம் நடந்த பிறகு சமூக அக்கறை உள்ளவர்களான பத்திரிக்கை உலகமும் தொலைகாட்சிகளும் என்ன முடிவேடுத்திருக்கவேண்டும் .... இனி எந்த மத போதனை ஆசாமிகளின் உரையையயும் வெளி இடக்கூடாதென்று ....நடந்ததா இன்னும் பல தொலைகாட்சிகளில் சமைய போதனை (எல்லா மதமும் பொருந்தும்) ஆசாமிகள் வந்து கொண்டு தானே இருக்கிறார்கள்
நாளிதழ்களில் . நித்தியானந்தா அல்லாத வேறு ஆனந்தாக்கள் எழுதிக்கொண்டுதானே இருகிறார்கள்....
பிறகு குற்றம் தொடராமல் ? நேற்று பிரேமானந்தா இன்று நித்தியானந்தா நாளை .....? .....

2 . காவல்துறை :-
காவல்துறை என்பது பல பிரிவுகள் உள்ளடங்கியது உளவுத்துறை, அதிரடி படை, சட்டம் ஒழுங்கு......இன்னும் பல ... இதில் informer என்கின்றவர்கள் வேறு......
இத்தனை இருந்தும் இதை விட சிறிய செய்தி சேகரிக்கும் நிலையம் சாட்சிகளை சேகரிக்கிறதேன்றால்?......... மிகவும் வேதனையாக இல்லை?
ஒரு தவறு ஒரு முறை நடக்கின்ற போதே மற்ற ஆசிரமங்களின் மீது இவர்கள் கண் வைத்திருக்க வேண்டும் ....
என்ன சொல்வது.......இந்த துறையின் குறைகள் அனைவரும் அறிந்ததே அதை விளக்கி நான் நேரத்தை வீனாக்க விரும்பவில்லை

3 . போராட்டம் செய்யும் இயக்கங்கள்:-


ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டு அதை உலகமே பார்த்து விட்ட நிலையில் பல இயக்கங்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றது ....!
போராட்டம் என்பதின் நோக்கமே... மக்களின் எழுச்சி.... எவருமே அறியாத ஒரு ஆசிரமமோ ஒரு செயலகமோ தவறு செய்து கொண்டிருக்கும்பொழுது அதை எதிர்த்து போராடி,... அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அதை பற்றிய உண்மைகளை வெளி கோனர்வதே இவர்களின் பொறுப்பு
ஆனால் இவர்கள் இன்று செய்து கொண்டிருப்பது செத்த பாம்பை அடித்துக்கொண்டிருப்பது .... நித்தியானந்தாவை கைது செய், கைது செய் என்று.,கூறும் ...... இவர்கள் பார்த்த தொலைகட்சிகலையோ அல்லது செய்தி தாள்களையோ யாரும் பார்த்திருக்கமாடர்களா ? இல்லை இவர்கள் கூறாவிட்டால் நித்யானந்தாவை கைது செய்ய மாட்டார்களா அப்பட்டமான சாட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும்பொழுது?... இவர்கள் இப்பொழுது .நடத்தும் போரட்டங்கள் பப்ளிசிட்டிக்காக என்றே சொல்ல தோன்றுகிறது

இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்.?... வேறு சமூகம் அறியாத
குற்றங்களை வெளி கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லை இதே குற்ற தொடர்புடைய ; இன்னும் பல ஆசிரமங்கள் உள்ளன சான்றாக சாமியார் என்ற போர்வையில் காலை தொட இவ்வளவு தொகை நின்று பார்க்க ஒரு தொகை என்று வசூல்ராஜாவாக ஆசிரமங்களை நடத்திகொண்டிருக்கும் கூட்டம் இந்த ஆசிரமங்களை முற்றுகைஇட்டு
விழிப்புணர்ச்சி ஏற்படுத்திஇருக்கவேண்டும் ..... நடக்கவில்லை !

இவர்கள் அனைவரும் பொதுப்படையாக மக்கள், மக்கள் விழிபுணர்வு, மூடநம்பிக்கை........என்று . காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் மக்கள் என்பது ஒரு சொல ஆனால் அது பல கோடி மனிதர்களையும் உள்ளடக்கியது அதை கூறினால் யாரும் தனிப்பட்டு கொவித்துகொள்ளமுடியாது ... பழி போட வசதியாய் இருக்கும் ஒரு சொல் அவ்வளவே ...

குற்றங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பெரும் பொருப்பிளிருக்கும் இவர்கள் சமுக கடமைகளை ஆற்றுவது எப்போது ?.... ...............

0 comments:

Post a Comment