Friday, March 26, 2010

மருந்து, மருத்துவம்,வியாபாரம்

சென்னையில் காலாவதியான போலி மருந்துகளை விற்ற ஆசாமியை போலிஸ் அர்ரெஸ்ட் செய்திருக்கிறது இதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.... ஆனால் இதை போன்ற பல சம்பவங்கள் சமீக காலமாக அல்ல பல காலங்களாக இங்கு நடந்து கொண்டிருகிறது... இது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.இந்த மருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் நடந்து கொண்டிருக்கு நான் அறிந்த பல விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்(முக்கிய குறிப்பு: நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை மருத்துவத்தை உணர்வில்லாமல் வணிகமாக செய்து வரும் மருத்துவர்களை மட்டுமே. இதில் வேதனை படவேண்டிய விஷயம் இந்த சதவிகிதம் சற்று அதிகமே... )இதை வணிக யுத்தி என்று சொல்லுவதா இல்லை அநியாயம் என்று சொல்வதா என்பதை அவரவர் மனதிற்கேற்ப விட்டுவிடுகிறேன் ...........உலகளவில் நிராகரிக்கப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் விற்க்கபடுகின்றன, விற்கப்பட்டன! இதற்கு இரண்டு சான்று
1 . PHENYLPROPANOLAMINE (விக்ஸ் ஆக்ஷன் 500 ௦௦) இருமலுக்குஉலக நாடுகள் தடை செய்ய காரணம் : இதயம பாதிக்கபடுவது
2 NIMUSLIDE - வலி நிவாரணிதடை செய்ய காரணம்- நுரையீரல் பாதிப்புக்கள்
மேலே கூறியவை போக இன்னும் பல மருந்துகள் இருக்கின்றன,.....இவை அனைத்தும் உலகளவில் பல அராய்ச்சிகள் செய்து தடை செய்யபட்டிருந்தாலும் நம் நாட்டில் விற்கபட்டிருகின்றன ...
இதை விற்ற கம்பனிகளும் பெரும் லாபம் ஈட்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம்
1 . சரியான சட்டங்கள் இல்லாமை
2 . இதனை நன்கு அறிந்த மருத்துவர்கள் அந்த கம்பெனிகள் தரும் ஸ்பான்சர், கிபட்ஸ் , மற்றும் எத்தனையோ சுய லாபங்களுக்காக அவற்றை சிபாரிசு செய்வது,
அவர்களெல்லாம் ஊற்றிய தண்ணீரில் பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது பல மருந்து,மருத்துவ மோசடிகள் .....
அந்த மருத்துவர்கள் ஒரு மருந்து கம்பெனிகளின் ரெப்ரசெண்டடிவ் வரும்பொழுது அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி
" நான் உங்களுக்கு பிசினெஸ் தந்தால் நீங்க எனக்கு என்ன செய்விங்க என்பதுதான்" அவர்களின் ஸ்பான்சர் அளவை பொறுத்து அவர்களின் மருந்து சிபாரிசு செய்யப்படும் இவை போக பல மருந்து கம்பனிகளிர்க்குள் போட்டா போட்டியே நடப்பதுண்டு யார் நல்ல கிப்ட் அலல்து ஸ்பான்சர் கொடுப்பது கொடுத்ததென்று !
இதுபோக இந்த கம்பனிகள் கடைகளில் மருந்துகளை அடுக்க செய்யும் உத்திகள் இன்னும் அதிகம்
இது இப்படியென்றால் லேப்களின் அட்டுழியம் வேறு வகை இவர்களுடய் வியாபார யுத்தி- தங்கள் லேபுக்கு வரும் ஒவொரு சீட்டுக்கும் அதை தொடர்புடைய டாக்டர்களுக்கு தனி கமிஷன்.....?
இதற்காகவே பல நேரங்களில் தேவை இல்லாமல் நோயாளிகளை லேபுக்கு அனுப்பும் டாக்டர்கள் பல.....
இவை இப்படி என்றால் ஹாஸ்பிடல்களின் வியாபார உத்தி இன்னும் கொடுமை....ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனால் அவர்கள் முதலில் நம்மை பற்றி விசாரிப்பது நாம் எந்த வேலையில் உள்ளோம் என்று.... உதரனத்திற்க்கு IT துறை என்றால்..... அதன் பில் விளைவு தனி....
இப்படி பெருவாரியான மருத்துவம் வியாபார உத்திகள் என்று சமாளித்துக் கொண்டிருக்கும்பொழுது நம்மை காப்பவர்கள் யார் என்றால் கண்டிப்பாக நம்மை போன்ற சாதாரண மக்களை காக்கபோவது சட்டங்கள் அல்ல நாமேதான் அதற்க்கு என்னால் முடிந்த சில டிப்ஸ் களை பகிர்ந்துகொள்கிறேன்.
1 . மருந்துக்களை பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் ... தடை செய்யப்பட்ட மருந்துகளை பற்றி விழிப்புணர்வோடு இருங்கள் உங்கள் மருத்துவர் அதை சிபாரிசு செய்தாலும் நேராக முடியாது என்று சொல்லுங்கள்.
2 . அடிப்படையான ஒன்று எக்ஸ்பயரி டேட் பார்க்காமல் எந்த மருந்தையும் ஏற்றுகொள்ளதீர்கள் . முக்கியமாக பில் வாங்குங்கள் ....
3 . முடிந்தவரை உங்கள் பண வசதி வேலை போன்றவற்றை ஹாஸ்பிடல்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
4 முடிந்தவரை ஆண்டிபயாடிக்ஸ்களை நிராகரியுங்கள் .... ஆண்டிபயாடிக்ஸ் என்பது தற்காலிக தீர்வுகளை கொடுத்து பல நிரந்தர .... பிரச்சினைகளை கொண்டு வரும் .....அது மட்டுமின்றி நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை அடியோடு அழித்து விடக்கூடியது......குறைந்தது தலைவலி ஜலதோஷம் போன்றவற்றிர்காவது அவசியம் ஆண்டிபயாடிக்ஸ் களை தவிருங்கள்.......
5. முடிந்தவரை சிறு சிறு வியாதிகளுக்கு (சான்று தலைவலி,இருமல்) பாட்டி வைத்தியங்களை கையாளுங்கள் .....வீட்டிலிருக்கும் பெரியோர்களிடம் கேட்டு அவசியம் கற்று தெரிந்துக்கொள்ளுங்கள் .... அவற்றின் அருமை அந்த வைத்தியங்கள் அழிந்த பின் தான் நமக்கு தெரியும்.... போக அதே பொருட்களை கொண்டு மருந்து என்று பல மடங்கு பணத்தை பிடுங்கி பெரும் கம்பெனிகள் விற்பனை செய்யும்போது தான் உணருவோம்.

0 comments:

Post a Comment